ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

செருத்துணை நாயனார் புராணசாரம்


திருச்சிற்றம்பலம்

செருத்துணை நாயனார் புராணசாரம்

செருத்துணை நாயனார்


சீரின் விளங்கும் அப்பதியில் திருந்து வேளாண் குடி முதல்வர்
நீரின் மலிந்த செய்ய சடை நீற்றர் கூற்றின் நெஞ்சு இடித்த
வேரி மலர்ந்த பூங்கழல் சூழ் மெய் அன்பு உடைய சைவர் எனப்
பாரில் நிகழ்ந்த செருத் துணையார் பரவும் தொண்டின் நெறி நின்றார் (4121)
திருமருகல் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர் எனும் திருப்பதியில், குலம் வழுவாது சிவபெருமானது திருவடியை அடைதலே இலக்கு என்ற ஒருமை நெறியில் வாழும் சீரிய வேளாண்மைத் தொழில் செய்யும் குடியில் தோன்றி, தலைவராய் விளங்கினார் செருத்துணை நாயனார்.
உலகு நிகழ்ந்த பல்லவர் கோச் சிங்கர் உரிமைப் பெருந்தேவி
நிலவு திருப்பூ மண்டபத்து மருங்கு நீங்கிக் கிடந்தது ஒரு
மலரை எடுத்து மோந்ததற்கு வந்து பொறாமை வழித் தொண்டர்
இலகு சுடர்வாய்க் கருவி எடுத்து எழுந்த வேகத்தால் எய்தி (4123)
அங்கே வழிபாட்டிக்கு வந்த கழற்சிங்க நாயனாருடைய மனைவியார் பூமண்டபத்தின் பக்கத்திலே கிடந்த ஒரு பூவை எடுத்து மோந்தார். அதைச் செருத்துணையார் பார்த்தார். மிகுந்த சினம் கொணைடார். விரைந்து ஒடி கத்தியை எடுத்தார். அம்மையார் கூந்தலைப்பிடித்து ஈர்த்தார். கீழே தள்ளி அம்மையாரின் மூக்கை அறுத்தார்.
அடுத்த திருத் தொண்டு உலகறியச் செய்த அடல் ஏறு அனையவர்தாம்
தொடுத்த தாமம் மலர் இதழி முடியார் அடிமைத் தொண்டு கடல்
உடுத்த உலகில் நிகழச் செய்து உய்ய செய்ய பொன் மன்றுள்
எடுத்த பாத நிழல் அடைந்தே இறவா இன்பம் எய்தினார் (4125)
செருத்துணை நாயனார் பலநாள் தொண்டு செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்
குரு பூசை : ஆவணி மாதம், பூசம் நட்சத்திரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக